கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் என்ற இடத்தில் ஏடி காலனியில் இருக்கும் 4 வீடுகள் மீது அருகிலிருந்த சுவர் அதிகாலை 3 மணியளவில் சரிந்து விழுந்ததில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ.25 வழங்க வேண்டும், குடும்பத்தில் யாருக்காவது அரசு வேலை வழங்கவேண்டும், சுவரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக போலீசார் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.