Skip to main content

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Published on 01/05/2019 | Edited on 02/05/2019

மெட்ரோ  ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் ஈடுபட்டுவந்தனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை அடுத்து தற்போது போராட்டம் வாபஸ் பெற இருப்பதாக போராட்டக் குழுத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

 

 Metro train workers withdraw strike

 

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி புரியும்  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கடந்த 29 ம் தேதி முதல் ஈடுபட்டிருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் எங்களது 22 கோரிக்கைகளில் குறைந்தபட்ச கோரிக்கை  வேலை நிறுத்தத்திற்கு உடனடி காரணமான 7 தொழிலாளர்கள் பிறகு ஒரு ஊழியர்  என மொத்தம் 8 பேரின்  வேலை நீக்கம் தொடர்பாக உடனடியாக ரத்து செய்தால் நாங்கள் இந்த வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவோம் என முக்கிய கோரிக்கையாக வைத்தோம்.

 

 

ஆனால் அதற்கு நிர்வாகம் எந்த ஏற்க முடியாது என்று நேற்றும் சொன்னார்கள் இன்றும் சொன்னார்கள் தொடர்ந்து அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தற்போது ஏற்பட்ட உடன்பாடு காரணமாக வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது எனக்கூறினார்.

சார்ந்த செய்திகள்