வாக்காளர் பட்டியலில் குளறுபடி...பொதுமக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு...!

திருவாரூர் அருகே இலவங்கார்குடி ஊராட்சியில் வார்டு வரையறை முறையாக செய்யப்படாததால், மறுவரையறை செய்த பின்னரே தங்கள் பகுதிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Mess up the voter list-Public appeals to Thiruvarur District Collector

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்டு இலவங்கார்குடி பஞ்சாயத்து உள்ளது. இந்த இலவங்கார்குடி ஊராட்சி வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் சில வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு ஊர்களில் உள்ள வார்டுகளில் சேர்க்கப்பட்டு குளறுபடியினை ஏற்படுத்தியும் உள்ளது.

சொந்த வார்டு பட்டியலில் வாக்காளர் பெயர்கள் தங்கள் பகுதிக்குள் இல்லாமல் மற்றொரு பகுதி வார்டில் உள்ளதால், தங்களுக்கான உறுப்பினரை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படக்கூடும். எனவே வார்டு உறுப்பினர் வெற்றியில் முறைகேடு நடைபெறவும் வாய்ப்பு உள்ளதால், வார்டு மறுவரையறையினை சரிவர மேற்கொண்ட பின்னர் தங்கள் பகுதிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

District Collector Thiruvarur voter list
இதையும் படியுங்கள்
Subscribe