Skip to main content

'மெரினா புரட்சி' - சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Published on 20/12/2018 | Edited on 20/12/2018


 

merina


 

ஜல்லிக்கட்டு போராட்டதை மையமாக வைத்து 'மெரினா புரட்சி' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் ராஜ். படப்பிடிப்பு முடிந்து சென்சார் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிக்கப்பட்டு 80 நாட்கள் ஆகியும் இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ராஜ் வழக்கு தொடர்ந்தார். மனுவில், பொங்கல் திருநாளையொட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளோம். சென்சார் சான்றிதழுக்காக விண்ணப்பித்து 80 நாட்கள் ஆகியும் சான்றிதழும் வழங்கவில்லை, ஏன் வழங்கவில்லை என்பதற்கான காரணமும் சொல்லவில்லை. மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறார்கள். பொங்கல் திருநாளின்போது படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில் எந்த காரணமும் இல்லாமல் இரண்டு முறை எங்கள் படத்தை நிராகரித்திருக்கிறார்கள். ஆகவே விரைவில் எங்கள் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

 

இந்த வழக்கு இன்று நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா புரட்சி படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பாக 7 நாட்களுக்குள் தகுந்த பதில்கள் அளிக்குமாறு சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'காக்கா முட்டை' இயக்குநர் வீட்டில் திருட்டு; கடிதத்துடன் வந்த தேசிய விருது

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
'kakka muttai' director's house burglarized; National award with letter

காக்கா முட்டை திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்ட நிலையில், இயக்குநருக்குத் திருடர்கள் கடிதம் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி தேசிய விருது பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில் நகர்ப் பகுதியில் மணிகண்டன் வசித்து வருகிறார். அடுத்த திரைப்படப் பணிகளுக்காக கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல மணிகண்டன் தன் படத்திற்காக வாங்கிய இரண்டு தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'kakka muttai' director's house burglarized; National award with letter

இந்த நிலையில், 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று இரண்டு வரிகள் எழுதப்பட்ட கடிதத்தையும் தேசிய விருதுக்கான பதக்கங்களையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டு கேட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். உசிலம்பட்டி காவல்துறையினர் அந்த கடிதத்தை கைப்பற்றிய தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.