தொடர் மழையால் மெரினா கடற்கரையில் நீர் சூழ்ந்துள்ளது... (படங்கள்)

'புரெவி' புயல், கரையைக் கடந்துவிட்ட நிலையில், மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில், அதிகாலை 05.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது.

தென் மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில், சென்னையிலும் பலத்த மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை காரணமாக,பல்வேறு முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின. சென்னை மெரினா கடற்கரையில் மழை நீர் தேங்கியுள்ளது.

MERINA BEACH
இதையும் படியுங்கள்
Subscribe