Skip to main content

'பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை'- நாங்குநேரியில் அமைச்சர் மா.சு பேட்டி

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

'Mental health counseling for students affected by the Nanguneri incident' - Information from Minister M.S

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தாக்கப்பட்ட மாணவனின் படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் சார்பில் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாணவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''இப்பகுதியில் நடந்த சிறு அசம்பாவிதத்தின் விளைவாக, தமிழக முதல்வர் எடுத்த விரைவு நடவடிக்கைகளின் காரணமாக காவல்துறையும் வருவாய் துறையும் விரைந்து செயல்பட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்றுபல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். படுகாயமடைந்த இரு சிறுவர்களும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு உயிர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் விரைந்த நடவடிக்கையின் விளைவாக இருவரும் திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த இருவருக்கும் தேவையான மனநல ஆலோசனைகளும் தற்போது மருத்துவர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இருவருக்குமே மிக தீவிரமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சைகளும் நடைபெற்ற முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் நிதித்துறை அமைச்சரை அனுப்பி வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். நேற்று அதன்படி நிதித்துறை அமைச்சர் வந்து சம்பந்தப்பட்ட குழந்தைகளின் தாயிடத்தில் பேசி, முதல்வரிடம் நேரடியாக பேசும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார். நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அந்த ஆணையத்தின் வழியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.