Published on 24/08/2021 | Edited on 24/08/2021

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2.23 ஏக்கரில் இந்த நினைவிடம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நினைவிடத்தில் கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப் படங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.