Skip to main content

போலீசாரைத் தாக்கிய பக்தர்கள்... 

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

melmaliyanur temple issue


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது மேல்மலையனூர். இங்குள்ள அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நள்ளிரவின்போது, இக்கோயிலில் நடைபெறும் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தைக் காண்பதற்காக தமிழகத்தில் மட்டுமல்ல புதுவை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக அரசு தடை உத்தரவு போட்டிருப்பதால் கடந்த 5 மாதமாக அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த 7ஆம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 


இந்த நிலையில், நேற்று ஏழாம் தேதி மகாளய அமாவாசை என்பதாலும், மிகச் சிறப்பான நாள் என்பதாலும், அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தைக் காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மேல்மலையனூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் காலை முதல் இரவு வரை வந்தவண்ணம் இருந்தனர்.  இப்படி மேல்மலையனூருக்கு வரும் பல வழிகளிலும் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கோவிலுக்கு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர். கூட்டம் அதிகளவில் வந்ததால், போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். 


மேல்மலையனூர் ஈயங்குணம் பிரிவு சாலையில், ஒரு காரில் கோவிலுக்கு வந்த நான்கு பக்தர்களை அங்கு பணியில் இருந்த ஏட்டு அய்யனார், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். குடிபோதையில் இருந்த அந்த நான்கு பேரும், எங்கள் காரை மட்டும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் போலீசாரை அவர்கள் நால்வரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இரு போலீசாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்ததும், வளத்தி போலீசார் அங்கு விரைந்துவந்து காயமடைந்த போலீஸ்காரர்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

 

Ad

 

இந்நிலையில், தாக்கிய நால்வரில், மூன்று பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதில் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், அயப்பாக்கம் சேட்டு, மேல்மலையனூர் இளங்கோ ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய மேலும் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். போலீசார் தாக்கப்பட்ட இச்சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.