Skip to main content

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சு. அறிவிப்பு 

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

ma subramanian

 

இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.

 

டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

 

இந்த அறிவிப்பை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மே 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.  இந்த மெகா தடுப்பூசி முகாமானது காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்