காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி!  

Medical student drowned in Cauvery river near Karur!

நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி அருகே உள்ள வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் காந்த்(18). இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பயின்று வருகிறார். இந்நிலையில் இவர், குடும்பத்துடன் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள மலையம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்போது அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக நவீன் காந்த் சென்றுள்ளார். இவருடன் பூஜேஸ் (13), நிஷாந்த் (9) இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர். இவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி பூஜேஸ் மற்றும் நிசாந்தை மீட்டனர். நவீன் காந்த் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து நவீன்காந்த்தின் பெற்றோர், புகலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர். வெகு நேரம் போராடி நவீன்காந்த்தின் சடலத்துடன் மீட்டனர். மேலும் அங்கு விரைந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

karur police
இதையும் படியுங்கள்
Subscribe