Skip to main content

கரோனா உடலை வைத்து பணம் பறிப்பு! - தனியார் ஆம்புலன்ஸ்களோடு மருத்துவ ஊழியர்கள் கூட்டணி?

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Medical staff alliance with private ambulances?

 

‘விருதுநகர் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் வாடகைக் கொள்ளை. விருதுநகரிலிருந்து பெங்களூருவுக்கு ரூ. 55,000. இந்த பொழப்புக்கு?’ என, இந்த ஊரடங்கின்போது கரோனா தொற்றில் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்வதற்கு அநியாயக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று, ஒரு குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, வாட்ஸ்ஆப்பில் கன்னாபின்னாவென்று கருத்துகள் பகிரப்பட, விவகாரம் விருதுநகர் மேற்கு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.   

 

‘கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினரிடம் ஆறுதலாக நடந்துகொள்ள வேண்டிய தருணத்தில், பிணத்தையும் சூழலையும் வைத்து தடாலடியாகப் பணம் பறிப்பது கொடுமையல்லவா?’ என்ற ஆதங்கம் விருதுநகர் வட்டாரத்தில் பரவிக்கிடக்க, களமிறங்கினோம்.

 

விருதுநகரில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்துபவர்களில், எஸ்.கே. ஆம்புலன்ஸ்தான் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. “கரோனா உடலை வைத்து பத்து மடங்கு வாடகை வசூலிக்கிறார்கள். இந்த அக்கிரம வசூலுக்கு வவுச்சரோ, ரசீதோ தருவதே இல்லை. ட்ரிபிள் வி கல்லூரி அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து மயானத்துக்குச் செல்லும் தூரம் 2 கி.மீ. மட்டுமே. இவர்கள் வசூலிப்பது ரூ. 8,500. இதற்கான கணக்கை, வாகனத்துக்கு ரூ. 3,500 + ட்ரெஸ்ஸிங் ரூ. 3,000 + டிரைவர் படி ரூ. 2,000 எனப் பிரித்துச் சொல்கின்றனர். விருதுநகரிலிருந்து மதுரைக்கு எடுத்துச் செல்வதற்கு கட்டணம் ரூ. 13,000 என்றும், பெங்களூரு வரை கொண்டு செல்வதற்கு ரூ. 55,000 என்றும் ரேட் வைத்துள்ளனர். உடலை ஏற்றும்போது, ‘மொதல்ல ஏறுங்க.. பார்த்துக்கலாம்..’ எனச் சொல்லிவிட்டு, உடலை இறக்கும்போதுதான், அநியாய கட்டண விபரத்தைக் கூறி, உயிரைப் பறிகொடுத்தவரது குடும்பத்தின் தலையில் இடியை இறக்குகிறார்கள். 

 

இந்த எஸ்.கே. ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தினர், மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதிலும் கல்லா கட்டுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு நேரத்தில், ரூ. 1,500 பெறுமான ஆக்சிஜன் ரெகுலேட்டர் கிட்டை,  மதுரையில் மெடிக்கல்ஸ் வட்டாரத்திலிருந்து ரூ. 2,400க்கு வாங்கி, இங்கே விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு ப்ளாக்கில் ரூ. 10,000க்கு விற்கின்றனர். திருமங்கலம் அருகே ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்திடம் ரூ. 300க்கு நிரப்பி, விருதுநகரில் ரூ. 3,000க்கு சப்ளை செய்கின்றனர். இந்தக் கொள்ளைக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்து, கமிஷன் பெற்றுவருகின்றனர்” எனக் குமுறலாகச் சொன்னார், நோயாளிகளின் உறவினர் தரப்பிலிருந்து ஒருவர். 

 

எஸ்.கே. ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தும் பகதுர் உசைனிடம் பேசினோம். “சிலர் எங்களைப் பற்றி இல்லாததை, பொல்லாததைச் சொல்கிறார்கள். மருத்துவமனை ஊழியர்களிடம் கூட்டு வைத்து எப்படி செயல்பட முடியும்? தொழில் போட்டியில் குறை சொல்கிறார்கள். இறந்தவரது உறவினர்கள் அவசரத்தில் பில் கேட்க மாட்டார்கள். கேட்டால் கொடுப்போம். 500 ரூபாய் வேண்டுமானால் கூடுதலாக வாங்குவோம். பெங்களூரு ட்ரிப்புக்கு வாடகை அதிகமாக வசூலித்தோம் என்று ஏன் சொல்கிறார்களென்றால், 11 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் உடன் எடுத்துச் சென்றோம். பொதுவெளியில் எங்களைக் கேவலப்படுத்தி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போட்டதால், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தோம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கண்டித்து அனுப்பிவிட்டார்கள்” என்று கட்டணக் கொள்ளை நடக்கவே இல்லை என மறுத்துப் பேசினார். 

 

விருதுநகரில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதுமே ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்ளை குறித்த கோபதாபங்கள் வெளிப்படுகின்றன. தமிழக அரசு, தனியார் ஆம்புலன்ஸ் விஷயத்திலும் கவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெகிழ்ச்சி செயல்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
election campaign; Minister Udayanidhi Stalin's resilience

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இருப்பினும் அங்கிருந்த கூட்ட நெரிசலால் அவ்விடத்தை விட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை. அதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்சிற்கு வழிவிடும் விதமாக உடனடியாக தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் அம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

Next Story

அவதிப்பட்ட மக்களுக்கு உதவிய பாலா

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
bala gives ambulance to tirupathur district peoples

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். அண்மையில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாமலும், உடல் நலத்தால் பாதிக்கப்படுவோர் 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் டோலி கட்டி செல்லும் நிலை இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பாலா ஆம்புலன்ஸ் உதவியை செய்துள்ளார்.