Skip to main content

''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 the robber's confession of action!

 

சென்னையில் மருந்து கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் ஒருவனை போலீசார் கைதுசெய்த நிலையில், சக்கரை நோய்க்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்துவதற்காக மருந்து கடைகளில் குறிவைத்து திருடியதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் கடந்த 29ஆம் தேதி பணம் மற்றும் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் குமரன் காலனி, மேற்கு மாம்பலம் எத்திராஜ் நகரிலுள்ள மருந்து கடைகளில் இதேபோல கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து புகார்கள் போலீசாருக்கு செல்ல, சைதாப்பேட்டை உதவி ஆணையர் அனந்தராமன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மற்றும் அதன் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

 

 the robber's confession of action!

 

அதில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிங்கி என்கிற அருண்குமார் என்ற இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமாரை போலீசார் கைதுசெய்து விசாரித்தபோது, சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மாத்திரையை 8 முதல் 10 வரை எடுத்து நீரில் கரைத்து, சிரஞ்சு மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்த பிங்கி அருண்குமார், மருந்து கடைகளில் பணத்தைக் கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட அந்த மாத்திரையையும் கொள்ளையடித்துள்ளான்.  

 

அந்த மாத்திரைகளை அவன் பயன்படுத்தியதோடு சிலருக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் அருண்குமார் திருடுவதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதை அறிந்த போலீசார், வாகனத்தை திருடி தந்த டாட்டூ பாபு என்ற நபரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருண்குமாரை, காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.