Skip to main content

'திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

 

medical seats govt schools students madurai high court bench governor

 

 

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மீது திங்கட்கிழமை நல்ல முடிவு தெரிய வரும் என நம்புகிறோம் என்று  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (29/10/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதிகள், 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். கர்நாடகாவில் இதுபோல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? பல கட்ட ஆலோசனைக்கு பிறகே சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா? 

 

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும். சூழல், அவசரம், அவசியம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உருவாக்கிய மசோதாவுக்கு கூடுதல் காலம் கேட்பது விசித்திரமானது. இதுபோல் சூழல்கள் எழாது என்பதாலேயே ஆளுநருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என சட்டம் உள்ளது. சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது; அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை. நீதிபதிகள் பலர் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்ததாக சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளனர். நீதிபதிகளை விமர்சிப்பது குறித்து அரசு தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், பிற மாநிலங்களில் என்ன நிலை உள்ளது என்பதை தெரிவிக்க அரசுக்கு பிற்பகல் வரை அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.

 

பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் 'கர்நாடகாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை' என விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், 300 முதல் 400 வரை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க தேவையில்லை என விதிகள் உள்ளன. விதி 361-ன் படி ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

 

சமூக,பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி பெறும் நிலையை வேலை செய்துகொண்டே வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இது குறித்து தரமற்ற முறையில் விமர்சிப்போருக்கு உண்மை விளங்கும். 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா மீது திங்கட்கிழமை நல்ல முடிவு தெரிய வரும் என நம்புகிறோம் என கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.