Skip to main content

11 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி உதவித் தொகை! - மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அமைச்சர் பாராட்டு!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020


 Medical scholarships for 11 government school students - Minister praises students and teachers!

 

தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ், 313 எம்.பி.பி.எஸ் உள்பட 404 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு புதன் கிழமை காலை தொடங்கி, இன்று வரை நடந்து வருகிறது.

 

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 59 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து, கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தது. இதில், முதல் நாள் கலந்தாய்வில், 13 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, 11 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல, நேற்று காயத்ரி என்ற மாணவி சுயநதிக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார். இதில், 5 மாணவ, மாணவிகள் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்துத் தேர்வாகியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள அனைவருமே, மிகவும் வறுமையில் வாடும் ஏழை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று 11 மாணவர்களையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விழாவில், புதிய மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குச் சில உபகரணங்களையும் சீருடையையும் வழங்கி அவர்களைப் பாராட்டினார். பிறகு, தனது சி.வி.பி அறக்கட்டளை சார்பில், அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையைக் கல்விக் கட்டணத்திற்காக வழங்கி, மேலும் உதவிகள் செய்யக் காத்திருக்கிறேன் என்றார்.

 

மேலும், கீரமங்கலம் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வாகியுள்ள 5 மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும் அழைத்து, "மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள், உங்கள் சாதனை மேலும் தொடர வேண்டும்!" என்று பாராட்டினார்.
 

cnc

 

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, "கிராமப்புற மாணவர்களுக்காக, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைத்திருப்பதால், இத்தனை அரசுப் பள்ளிகளில் படித்த, ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். அதாவது, 404 மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. இது மேலும், விரிவடையும்" என்றார். கல்வி உதவித் தொகை பெற்ற மாணவர்களும், பெற்றோர்களும் அமைச்சருக்கு நன்றி கூறினார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

குளியலறையில் ரகசிய கேமரா; வசமாக சிக்கிய மருத்துவ மாணவர்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
A medical student caught in the lurch at Hidden camera in the bathroom

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (36). இவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது வீட்டில் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.  

அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து, அந்த பெண் குளிக்கும் போது வீடியோ எடுப்பதற்காக குளியலறை அருகே ஸ்பை பெண் என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், குளியல் அறையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பேனா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அது உளவுக்கருவி என்பதும் அதில் கேமரா இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன், ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். குளியலறையில், ரகசிய கேமரா வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.