நீட் மருத்துவ நுழைவு தேர்வு மூலம் 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு மருத்துவ இடம் கிடைத்திருக்கிறது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ் மொழியில் மட்டும் 24ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளின் உள்ள 2447 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அரசு பள்ளியை சேர்ந்த 4 பேர் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த கலந்தாய்வில் அரசு பள்ளியில் பயின்ற 2 மாணவருக்கு மட்டும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நீட் கடந்த ஆண்டு கலந்தாய்வில் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 3 அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு என மொத்தம் 5 பேருக்கு இடம் கிடைத்தது. இந்த ஆண்டு 4 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 26 அரசு உதவி பெரும் பள்ளி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ கிடைத்திக்கிறது.
நீட் தமிழ் வினா தாளில் 49 கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டு இருந்த சர்ச்சை கிளம்பி இருந்தது. தமிழ் வினாகள் பிழை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் அரசு பள்ளிகளிலிருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க கூடும்.
நீட் தேர்வால் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம்!
சார்ந்த செய்திகள்
Next Story
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Next Story
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.