Advertisment

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி போலீசாருக்கு மருத்துவ முகாம்

nn

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

Advertisment

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம்,ஈரோடு செங்குந்தர் ஆண்கள் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமினை ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் குத்துவிளக்கேற்றித்தொடங்கி வைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, சர்க்கரை பாதிப்பு, கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் தொழிலதிபர் அக்னி சின்னசாமி, டாக்டர் சகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe