Skip to main content

முதல்வர் எடப்பாடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மோப்பநாய்... காவலர்களுக்கு பதக்கம் வழக்கும் விழா (படங்கள்) 

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

 

காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவல்துறையில் உள்ள மோப்பநாய் பூங்கொத்து அளித்து வரவேற்றது.

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது காவல்துறையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் காவல்துறையின் ஒரு பகுதியான மோப்ப நாய்களின் சாகச  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த லிங்கா, லியோ, வாலி, ராக்கி, வீரா ஆகிய நாய்கள் காவல்துறையினருடன் சாகசங்களை நிகழ்த்தி காட்டின.

அப்பொழுதில் லிங்கா என்ற நாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் நிற்கும் திருடனை பதுங்கிச் சென்று பாய்ந்து பிடிக்கும் சாகசம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

 

Next Story

சைலேந்திரபாபு ஓய்வும் சங்கர் ஜிவால் பதவியேற்பும் (படங்கள்)

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காவல்துறை தலைமையகத்தில் சைலேந்திரபாபு புதிதாகப் பதவியேற்ற சங்கர் ஜிவாலிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

 

இதையடுத்து காவல்துறை சார்பில் அவரை காரில் அமர வைத்து புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. காவலர்கள் அணிவகுப்பு நடத்தி சைலேந்திர பாபுவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் சைலேந்திர பாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கலந்துகொண்டு சைலேந்திரபாபு அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.