Skip to main content

புகார் அளிக்க சென்ற பெண்ணுடன் காவலரின் பழக்கம்? விரக்தியில் கணவர் தற்கொலை! 

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

ww

 

மதுரை எச்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னியில் காவல்துறை எஸ்.ஐ இருக்கிறார் என்று மெக்கானிக்கின் உறவினர்கள் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில்  அந்த மெக்கானிக், குற்றஞ்சாட்டப்படும் எஸ்.ஐ-யிடம் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, மெக்கானிக்-கும் அவர் மனைவிக்குமிடையே சமீபகாலமாக வாய்த் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எஸ்.எஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனில் முன்பு பணிபுரிந்து தற்போது உளவுத்துறையில் பணியாற்றும் எஸ்.ஐ.யிடம் மெக்கானிக்கின் மனைவி புகார் தெரிவித்துள்ளார். இந்த பழக்கம் தொடர்ந்துள்ள நிலையில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார்” என்கிறார்கள். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அந்த மெக்கானிக் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யிடம் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

இருவரும் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், “வணக்கம் சார். புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இப்படி பண்ணலாமா? பேசுவதில் தப்பில்லை. பேசுகின்ற விஷயம் தப்பாக உள்ளது. குடிப்பவன் ஆம்பளை இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்” என்கிறார் மெக்கானிக்.

 

மறுமுனையில், எஸ்.ஐ பேசுகையில், “தப்பாக இருந்தால் மன்னித்துவிடு. இனிமேல் அப்படி நடக்காது” என்கிறார்.

 

மீண்டும் மெக்கானிக் பேசுகையில், “நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. ஒரேயொரு பிள்ளை. மது குடித்துவிட்டு அவளுடன் சண்டை போட்டது உண்மைதான். அதுபற்றி உங்களிடம் புகார் செய்யத்தானே வந்தாள். அவளிடம் நீங்கள் இவ்வளவு தூரம் பேசி பழகினால் எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும். இன்று காலையிலிருந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். அவள் என்னிடம் இப்போதுவரை பொய் சொல்கிறாள். மனதளவில் நொந்துபோயுள்ளேன்” என்கிறார்.

 

பின்னர் எஸ்.ஐ பேசுகையில், “நடந்த விஷயங்களை மறந்துவிடு. இனி அப்படி நடக்காது” என்கிறார்.

 

மெக்கானிக் பேசுகையில் “தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். உங்கள் வீட்டில் நடப்பது எல்லாம் எனக்கு தெரியும். நேரில் வந்து பேச ஒரு நிமிடம் ஆகாது. கையெடுத்து கும்பிடுகிறேன். இத்தோடு விட்டுவிடுங்கள்” என்கிறார்.

 

எஸ்.ஐ பேசுகையில், “சரி, இனி அப்படி நடக்காது. உன் குடும்பத்தை சரியாக பார்த்துக்கொள்” என்கிறார்.

 

கடைசியாக மெக்கானிக் பேசுகையில், “புகார் கொடுக்க வந்தவளை நீங்கள் இப்படி பயன்படுத்தியிருக்க கூடாது. இந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி அவமானப்பட விரும்பவில்லை. இனி மெசேஜ் ஏதும் வேண்டாம்” என சொல்கிறார்.

 

எஸ்.ஐ பேசுகையில், “இனி உன் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு” என்கிறார்.

 

இப்படி பேசியுள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``இது குறித்து வந்த புகாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆடியோவின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. குற்றம்சாட்டப்படும் எஸ்.ஐ-யிடமும் அந்த மெக்கானிக் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.