Skip to main content

இந்துத்துத்துவா நெருக்குதலுக்கு அஞ்சுகிறாரா வைகோ?

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

கோவில்களுக்குச் செல்லும் இந்துக்களின் மனம் புண்படும்படி கேலி செய்யக்கூடாது. கோவிலுக்கு போக விருப்பம் இல்லாதவர்கள் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம். ஆனால், கோவிலுக்கு போகிறவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.


வைகோ என்னவோ புதிதாக பேசியதைப் போல இந்த விஷயத்தை பூதாகரமாக்குகிறார்கள் என்றே திராவிட இயக்க கருத்தியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரை கும்பிடவும் மாட்டேன் என்ற நடைமுறை திமுகவில் பல காலமாக தொடர்கிறது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கமாக திமுக இருந்தாலும், மக்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறது. கலைஞர் காலத்திலிருந்தே, திமுகவினரின் குடும்பத்தினர் கோவில்களுக்குப் போவது வாடிக்கையாக இருப்பதை காணமுடியும்.


இந்நிலையில்தான் வைகோவின் பேச்சுக்கு ஏன் முலாம் பூசப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார்? “மதுரை மீனாட்சி கோவிலுக்கும். திருப்பதி, சிதம்பரம் மற்றும் அத்திவரதருக்காக காஞ்சிபுரத்திற்கும் லட்சக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். நானும்கூட எனகு கிராமத்தில் உள்ள கோவிலை புனரமைத்துக் கொடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது, கோவிலுக்கு செல்வோரை கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால், இதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஏற்க மாட்டார்” என்று வைகோ கூறியிருக்கிறார்.

mdmk party vaiko mp special discussion speech


திமுக நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணாவும்கூட காலத்திற்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தனது வாதத்தை நியாயப்படுத்துகிறார் வைகோ. சனாதனவாதிகளின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை தடுக்க இத்தகைய மாற்றம் அவசியம் என்றும் அவர் கூறினார். இதுவரை ஆலயம் செல்வோரை வைகோ வெளிப்படையாக கிண்டல் செய்ததில்லை. இந்நிலையில்தான் அவருடைய பேச்சு, திராவிட இயக்கத்தில் உள்ள இந்துக்களை பத்திரப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.


திராவிட இயக்கங்களை இந்துக்களுக்கு எதிரானவையாக காட்ட சங் பரிவாரங்கள் முயற்சி செய்வதால், இப்படி பேசும்படி வைகோ நிர்பந்தம் செய்யப்படுகிறார் என்ற கருத்தும் இருக்கிறது. ஏற்கெனவே, பாஜகவினர் திமுகவை இந்து விரோதக் கட்சி என்று கூறியதற்கு ஸ்டாலின் இதே தொனியில் பதில் அளித்திருக்கிறார். திமுக என்றும் இந்துக்களுக்கு எதிரானது அல்ல. கட்சியில் இருக்கும் 90 சதவீதம் உறுப்பினர்கள் இந்துக்கள்தான். இப்போதும் தனது குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, திமுகவை இந்து விரோத கட்சியாக முத்திரை குத்த முயற்சி நடக்கிறது என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.
 

வைகோவின் இந்தப் பேச்சு திராவிட இயக்கத்தின் மையக்கருத்திலிருந்து விலகுவதாக இருக்கிறதா என்று திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர் க.திருநாவுக்கரசுவிடம் நிருபர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அளித்த பதில்…

mdmk party vaiko mp special discussion speech


“இப்படி பேசுவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லாத போது, வைகோ இதை தனது கட்சி பொதுக்குழுவில் விவாதித்திருக்க வேண்டும். பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கக் கூடாது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கின்றன. ஆளும் அதிமுகவோ பாஜக ஆதரவாக செயல்படுகிறது. பாஜகவோ தமிழ் விரோத கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. எனவே, திராவிடக் கட்சிகள் தங்கள் வியூகங்களை மாற்றவேண்டிய அழுத்தத்தில் இருக்கின்றன என்று யாரும் சொல்லமாட்டார்கள்” என்றார்.
 

விடுதலை ராஜேந்திரனின் கருத்தோ வேறுவிதமாக இருக்கிறது…
 

“ஆர்எஸ்எஸ்சும், சங் பரிவாரங்களும் திராவிட கட்சிகளை இறுக்கமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளன. எனவேதான் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் இத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். திராவிட கட்சிகள் எப்போதும் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானவை இல்லை. பெரும்பான்மை இந்துக்களின் சுயமரியாதைக்கும் கவுரவத்திற்கும், உரிமைகளுக்கும் எதிராக செயல்படும் வேத மதத்திற்கு எதிராகத்தான் இருக்கின்றன. திராவிட இயக்கத் தலைவர்களை இந்து விரோதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கிறவர்கள்தான், பெரும்பான்மை இந்துக்களின் உரிமைகளை மறுக்கிறார்கள் என்பதையும், ஆலயங்களில் நுழைய விடாமல் தடுக்கிறவர்கள் என்பதையும், பிராமணர் அல்லாதோர் ஆலயங்களில் பூசாரிகள் ஆவதை தடுப்பவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.