இன்று (08.03.2023) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில், உலக மகளிர் தின விழா மதிமுகவின் தலைமை நிலையமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். மதிமுகவின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட ஏராளமான பெண் நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.