Advertisment

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்

மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நாற்பது இந்திய எல்லைக்காவல் படையினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

மேலும், மதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தூத்துக்குடி சூ.சேவியர், திண்டுக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர் இரா.அருள்சாமி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் எம்.சம்பத் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

mdmk Meeting office
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe