Advertisment

“பொங்கலோ பொங்கல்” மழலைகள் மகிழ்ச்சியில் பொங்கிய பொங்கல்..! பள்ளியில் நடந்த பொங்கல் விழா. (படங்கள்) 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. சுமார் 350 மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பொங்கலிட்டு வழிபட்டனர். பானையில் பொங்கல் பொங்கி வந்ததும் "பொங்கலோ பொங்கல் .... பொங்கலோ பொங்கல் " என உற்சாகத்துடன் கைத்தட்டி கொண்டாடினர். நாட்டுப்புற நடனம், வில்லுப்பாட்டு, கிராமத்து கதைகள் கூறுவது போன்ற நிகழ்ச்சிகள் செய்து அசத்தினர். நிகழ்ச்சியில் எம்.சி.சி பள்ளியின் தாளாளர் ஜி.எஸ்.மனோகர், தலைமை ஆசிரியை பிரசில்லா சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

Advertisment

pongal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe