சென்னை மாநகராட்சியில் ஏற்றப்பட்ட மேயர் கொடி (படங்கள்)

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இன்று (4ஆம் தேதி) மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பாளர்களை கட்சி தலைமைகள் நேற்று அறிவித்தன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயராக ஆர்.பிரியா அறிவிக்கப்பட்ட நிலையில்இன்று அவர்மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற துணை மேயருக்கான தேர்தலில் சைதை ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கொடி ஏற்றப்பட்டது.

Chennai mayor
இதையும் படியுங்கள்
Subscribe