Advertisment

மேயருக்கு 'மறைமுக தேர்தல்' -அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு!  

தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டுதமிழக அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

Mayor 'indirect election' -  Emergency Law ... Government Release!

தமிழகத்தில்அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த முறை கடைசியாக நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில்மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவரச சட்டத்தை கொண்டுவர தமிழக அமைச்சரவையில்நேற்று முடிவு செய்யப்பட்ட நிலையில் மேயர், நகராட்சி,பேரூராட்சி தலைவர் ஆகியபதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தல் முதல்முறையாக நேரடி தேர்தலாக நடத்தப்பட்டது. அதன்பிறகு 2006 ஆண்டுவரைமறைமுக தேர்தலாக மாற்றப்பட்டது. அதன்பின் கடைசியாக நடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு மேயர் தேர்தலை நேரடி தேர்தலாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில்15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலை நடத்த அமைச்சரவை முடிவெடுத்து அவரச சட்டம் கொண்டுவரப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

local election mayor Tamilnadu govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe