Skip to main content

முன்பே கணித்த நக்கீரன்! மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

 Mayor Candidates of Trichy and Karur Announcement!

 

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்களின் பட்டியல்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

 

 Mayor Candidates of Trichy and Karur Announcement!

 

அதில் திருச்சி மாநகராட்சி மேயராக 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பழகனும், 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவ்யா தனகோடி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

 Mayor Candidates of Trichy and Karur Announcement!

 

அதேபோல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவிதா கணேசன் கரூர் மாநகராட்சி மேயராகவும், துணை மேயராக தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 Mayor Candidates of Trichy and Karur Announcement!

 

தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக வாக்கு பதிவானது நாளை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாநகராட்சிகளின் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியவற்றை நம் நக்கீரன் முன்பே கனித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்