Skip to main content

காவு கேட்கும் பாதாளசாக்கடை; பீதியில் மயிலாடுதுறை மக்கள்!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

மயிலாடுதுறை நகரத்தில் பாதாளசாக்கடை பனிரெண்டாவது முறையாக உள்வாங்கியிருப்பது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பெருத்த கவலைக்கு தள்ளியிருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2009 ஆம் ஆண்டு 42 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் துவங்கப்பட்ட நாள் முதலிலிருந்தே அதில் ஊழல் மலிந்திருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தபடியே இருந்தது. பாதாள சாக்கடை திட்டத்தின் படி " கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதில் புல் வளர்ப்போம்," என்றனர் இதற்காக ஆறுபாதி கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையமும் கழிவு நீரை கொண்டு செல்ல எட்டு இடங்களில் பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று அத்தனையும் படு மோசமாகி முடங்கி கிடக்கிறது. வீதிக்கு வீதி பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு நடைபாதை வாசிகளையும், வாகன ஓட்டிகளையும் திணறடித்துள்ளது.

 

Mayiladuthurai people in panic!

 

இந்தநிலையில் மயிலாடுதுறை தரங்கம்பாடி, நாகை சாலையில் திடீரென்று உருவான பள்ளம் நகரத்தை மட்டுமின்றி நாகை மாவட்டத்தையே கதிகலங்கச் செய்தது. அதை சரி செய்வதற்குள் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்வாங்கி பெரும்பள்ளம் ஏற்பட்டது. அதை மூடி சரி செய்யவே இருபது நாட்கள் எடுத்துக் கொண்டனர் அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும். அது முடிந்து அடுத்த இரண்டு நாட்களிலேயே 12 வது முறையாக மீண்டும் திருவாரூர் சாலையில் கண்ணார தெரு பகுதியில் மீண்டும் பாதாளசாக்கடை உள்வாங்கியுள்ளது. அந்த வழி பிரதான சாலை என்பதால் போக்குவரத்து முற்றிலுமாக தடை பட்டது, பொதுமக்களும் போக்குவரத்து வாசிகளும் பெருத்த இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

 

Mayiladuthurai people in panic!

 

இதுகுறித்து நகரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம் ," மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே குழப்பம்தான், அப்போதில் இருந்தே கழிவுநீர் மூடிவழியாக வெளியேறியபடித்தான் இருக்கிறது. ஆனால் தற்போது கழிவு நீரை கொண்டு செல்லும் ஷங்ஷன் எதுவுமே முழுமையாக வேலை செய்யவில்லை. கழிவுநீர் கொண்டு செல்லும் குழாய்கள் அனைத்திலும் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து விட்டன. சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள குளங்களில் ஒன்று முழைமையாக துந்து போய்விட்டது. இப்பவே இப்படி உள்வாங்குது, வரும் மழை காலத்தில் எந்தெந்த இடத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கப் போகிறதோ புரியல.  இதுவரை நகராட்சி நிர்வாகம் பாதிப்புக்கான இடங்களை கண்டு பிடிக்கவே இல்லை. பெருத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் கூட இருக்கிறது." என்கிறார் கவலையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார்.