'மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். நியமனம்'- தமிழக அரசு உத்தரவு!

mayiladuthurai district police sp and special officer appointed to tn govt

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஸ்ரீ நாதா ஐ.பி.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளை உருவாக்க மாவட்ட சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி.) இருந்த ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. யாக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mayiladuthurai police SPECIAL OFFICERS tn govt
இதையும் படியுங்கள்
Subscribe