Skip to main content

மே ஒன்றில் மத்திய, மாநில அரசுகளை அகற்ற அனைவரும் சபதமேற்போம்-முக.ஸ்டாலின்

Published on 01/05/2018 | Edited on 01/05/2018

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (01-05-2018) மே தினத்தை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அங்கு திரண்டிருந்த பெருந்திரளான தொழிலாளர் நண்பர்களிடத்தில் உரையாற்றினார் 

 

மே தின விழா நிகழ்ச்சியிலே பங்கேற்க வந்துள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை நிர்வாகிகளே, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கும் முன்னோடிகளே, மாவட்டக் கழக நிர்வாகிகளே, பேரன்பிற்குரிய தொழிலாளர் நண்பர்களே 133வது மே தின விழாவினை நாம் இன்றைக்கு கொண்டாடி கொண்டிருக்கிறோம். 

 

mk stalin

 

மே தினம் என்பது தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கும் நாளை போற்றக்கூடிய வகையில் இதை நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். அப்படி கொண்டாடுகிற வகையிலே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய மே தின நினைவுச் சின்னமான தொழிலாளர்களின் பெருமையை நிலைநாட்டக் கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த சின்னத்திற்கு நம்முடைய மலரஞ்சலியை செலுத்தி, இந்த மே தின விழாவை கொண்டாடி வருகிறோம்.

 

இன்றைக்கு மத்தியிலே இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் தொழிலாளர்களின் விரோத ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மத்திய மாநில ஆட்சியை அப்புறப்படுத்துவது தான் நம்முடைய முதல் நோக்கமாக அமைந்திட வேண்டும். அதற்கு உறுதியேற்கக் கூடிய நாளாக இந்த நாளை, இந்தாண்டு கொண்டாடுகிற நேரத்தில் நாம் அனைவரும் சபதமேற்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

 

1967ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலே பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் தலைமையில் முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்த பிறகு தான், தொழிலாளர்களின் தினமாக இருக்கும் இந்த மே தினத்திற்கு அரசு விடுமுறையை ஏற்படுத்தி தந்தார்கள். அண்ணாவின் மறைவிற்கு பிறகு அவரது இதயத்தை இரவலாக பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, “அறிஞர் அண்ணா மே தினத்தை விடுமுறையாக தந்தார், அவருடைய தம்பியாகிய நான், ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்கிறேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அதனை நிறைவேற்றி தந்தார்கள்.

 

mk stalin

 

இன்னும் சொல்ல வேண்டுமென சொன்னால், இது மத்திய அரசுக்கும் பொருந்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்து, அதற்கு பின்னால் அன்றைக்கு பாரத பிரதமராக இருந்த மண்டல் கமிஷன் நாயகனாக விளங்கிய வி.பி.சிங் அவர்களிடத்தில் வாதாடி போராடி மத்திய அரசு ஊழியார்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெற்றுத் தந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். எனவே தொழிலாளர்களுக்கு என்றைக்கும் குரல் கொடுக்கும் ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

 

அண்மையிலே நடந்த ஒரு செய்தியை உங்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டுமென சொன்னால், நம்முடைய போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்திலே ஈடுபட்ட செய்தியெல்லாம் தெரியும் மறந்திருக்க மாட்டீர்கள். அது இன்றைக்கு நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருக்கும் பிரச்சினை. அந்தச் சூழ்நிலையில் தான், இன்றைக்கு இருக்கும் ஆட்சி சட்டமன்றத்திலே சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தப் போகிறோம் எனச் சொல்லி, ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மாத சம்பளம் 55 ஆயிரம் ரூபாய், அதனை உயர்த்தி 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

 

வெளியிட்ட உடனே நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எழுந்து, அதுகுறித்து ஒரு விளக்கத்தை சொன்னேன், நீங்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறீர்கள், இன்றைக்கு நாட்டிலே எல்லா தரப்பு மக்களும் பல்வேறு கொடுமையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.

 

விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகி மாண்டு கொண்டிருக்கிறார்கள், நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அதிலும் குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களின் கோரிக்கையை நிறைவேறுகிற வகையிலே சட்டமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு நீங்கள் தருகிற அந்த ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் உட்பட 89 சட்டமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தை பெற்று சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்னேன்.

 

mk stalin

 

ஆனால், இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக அரசும், முதலமைச்சரும் அதுகுறித்து எந்த விதமான விளக்கமும் தரவில்லை. இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டீர்கள் என்றால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெற்றுக்கொண்டு வருகிறார்கள். நாங்கள் இன்னமும் அந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன். எப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை தீருகிறதோ அப்போது வரையில் அதிகமாக தரக்கூடிய ஊதியத்தை பெருவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறோம்.

 

இதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு காரணம் என்னவென்று கேட்டால், என்றைக்கும் தொழிலாளர் நண்பர்களுக்கு பக்கபலமாக இருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வகையில் என்றைக்கும் எங்களுடைய பணி தொடரும் தொடரும் என்கிற உறுதியோடு தொழிலாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகளை என்னுடைய சார்பிலே மட்டுமல்ல, இன்றைக்கும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துகொள்கிறேன் எனக்கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.