Advertisment

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் , தங்கம் !

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . இதனால் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாநிலங்களிலும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார் .இந்நிலையில் நேற்று வரை (07/04/2019) தமிழகத்தில் சுமார் 160.39 கோடி ரூபாய் பணமும் , சுமார் 228.85 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் , வெள்ளிஉள்ளிட்ட பொருட்களுடன்மொத்தம் சுமார் 398.11 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் .

Advertisment

election commission

மேலும் குஜராத் மாநிலத்தில் மட்டும்மொத்தம் சுமார் 513.2 கோடி மதிப்பிலான பணம் ,தங்கம் ,உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படையினர் .இது இந்தியாவிலேயே குஜராத்தில் தான் அதிக மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மக்களவைக்கானமுதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சோதனையை தீவிரப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம்முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது .

பி.சந்தோஷ் , சேலம் .

gold money Tamilnadu Seized election commission
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe