பேரவைக்குள் குட்கா கொண்டுச் சென்ற விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

matter of unwanted being carried into Assembly High Court action order

கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு குட்காவுடன் வந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள், ‘தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அதிகரித்துள்ளது’ எனக் குறி முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்தும், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக தெரிவித்தும் சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸில் தவறுகள் இருந்தால் அதனை திருத்தி அனுப்பலாம். ஆனால் நோட்டீஸை ரத்து செய்ய முடியாது எனத் உத்தரவிட்டிருந்தது இதையடுத்து உரிமைக்குழு சார்பில் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

matter of unwanted being carried into Assembly High Court action order

இதனை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நோட்டீஸை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே சமயம் இந்த நோட்டீஸை அனுப்பியதை ரத்து செய்ய முடியாது என கூறி சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ராமன், ‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் நோட்டீஸ் வரவில்லை என வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிமன்றம், “முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் தரப்பில் கூட நோட்டீஸ் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே அப்போதைய திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு திமுக மீண்டும் நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்படுகிறது.” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு 25 ஆம் தேதிக்கு (25.07.2024) ஒத்திவைக்கப்பட்டது.

Notice
இதையும் படியுங்கள்
Subscribe