ADVERTISEMENT

விஜய் டிவிக்கு தற்கொலை மிரட்டல்; மதுமிதா மீது போலீசில் புகார்

12:46 PM Aug 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அது நிகழ்ச்சிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அந்நிகழ்ச்சியில் இருந்து நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வெளியே வந்த மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் சென்னை கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பேசப்பட்ட தொகையில் பாக்கித்தொகையை உடனடியாக வழங்கவேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மதுமிதா, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளருக்கு வாட்ஸ் -அப் மூலம் மிரட்டல் விடுப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து நடிகை மதுமிதா, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது பற்றி இதுவரையிலும் எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. ஆனால், என்னை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT