Advertisment

"புதிய வினாத்தாளில் நாளை கணித தேர்வு..." - அமைச்சர் அன்பில் மகேஷ்

hkj

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில், நாளை நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் இன்று மதியம்வெளியானது. தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதற்காக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது வினாத்தாள் கசிந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளோடு தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்,புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Question
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe