Skip to main content

''தனி நபர்களுக்கு எலி பேஸ்டை விற்க கூடாது''-மா.சுப்பிரமணியன் பேச்சு! 

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

Ma.Subramanian speech!


'தனி நபர்கள் எலி பேஸ்ட்டை வாங்க கடைகளுக்கு வந்தால் விற்கக் கூடாது' என மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தியின் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை மேயர், மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''வீட்டுக்கு வெளியில் போடக்கூடிய கோலங்களில் கூட அரிசி மாவினால் கோலம் போடப்பட்டது. கோலம் போடுவது என்பது அழகு படுத்துவது என்பதையும் கடந்து எறும்பு போன்ற நுண்ணுயிர்கள் அரிசி கோலத்தில் இருக்கின்ற அரிசி துகள்களை சாப்பிடுவதற்காகவே அந்த கோலம் போடுவது என்பது அந்த காலங்களில் நடைமுறை பழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட இன்றெல்லாம் மாறி, எல்லாம் செயற்கையாக உள்ளது. இந்த செயற்கை எல்லாம் பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் சாணம் என்பதற்கு பதிலாக சாணி பவுடர் என்பதை வாங்கி வீட்டில் வைத்திருப்பது என்பது எல்லா வீடுகளிலும் பழக்கமாகிவிட்ட சூழல் உள்ளது. இந்த சாணி பவுடர் இன்றைக்கு உயிரை போக்குகிற ஒரு மிகப்பெரிய விஷத்தன்மை வாய்ந்தது என்பதாலே இளம் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பொழுது தங்களுடைய உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுவோர்கள் உடனடியாக எடுத்து உண்ணுகிற ஒரு நிலை ஏற்படுகிறது. அதனால் தான் அதிக அளவில் இளம் பெண்களின் மரணம் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

அதேபோல்தான் இந்த எலி பேஸ்ட். எலிகளை கொள்வதற்குரிய பாசனம் என்பது தேவையா தேவையில்லையா என்றால் விவசாய பெருமக்களுக்கு அது தேவை என்று கருதப்படுகிறது. ஆனாலும் கூட அது மனிதர்களின் உயிர் கொல்லியாக இருக்கும் பட்சத்தில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பொதுவாகவே தற்கொலைக்கு முயற்சி செய்பவராக இருந்தாலும் நேராக மருந்துக் கடைக்கு தனியாக சென்றுதான் எலி பேஸ்ட்டை கேட்பார்கள். நண்பர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு போய் மருந்து கடையில் இன்றைக்கு நான் எலி பேஸ்ட் வாங்கி நாளை காலை எட்டு மணிக்கு சாப்பிட போகிறேன் என்று யாரையும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அதனால் தான் தமிழக அரசின் சார்பில் மிக விரைவில் எலி பேஸ்ட்டை மருந்துக் கடைகளில் தனியாக வாங்குபவர்களுக்கு தரக்கூடாது என்கின்ற உத்தரவை கடைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும்.  கடைக்காரர்கள் அதனை சரியாக செய்கிறார்களா என்பதை நம்முடைய துறையின் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.