நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பு இன்றுடன்முடிந்தது.
'நன்றி நெய்வேலி' என தனது பின்னால் ரசிகர்கள் இருப்பது போன்ற தான் எடுத்த செல்பி புகைப்படத்துடன் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று (09/02/2020) என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது, நடிகர் விஜய் வேன் மீது ஏறி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.