salem

சேலத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்துள்ளது வெள்ளியம்பட்டியில்வசித்து வருபவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இன்று சரவணன் தன்னுடைய காரில் வெள்ளாளகுண்டம் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வலசையூர் அடுத்துள்ள பனங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்ப அவரது காரை வழிமறித்து காரில் இருந்து அவரை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். சரவணன் அங்கிருந்து தப்பி ஓட ஓட முயன்ற நிலையில் ஓட ஓட அவரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்க முயன்ற நிலையில் கொலை செய்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடனடியாக காரிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சரவணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

சேலத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கொலையான சரவணன் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்தன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.