Skip to main content

கீரமங்கலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம். 5 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
cctv

  

 கீரமங்கலத்தில் ஒரே நாள் இரவில் 5 கடைகளில் பூட்டுகளை உடைத்து முகமூடி கொள்ளைகள் அட்டூழியம். குண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.


5 கடைகளில் திருட்டு :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் மேற்பனைக்காடு சாலை அருகே உள்ள பேக்கரி, மளிகைகளை, பூச்சிமருந்துகடை, ஜவுளிக்கடை, ஆட்டோ மெக்காளிக் கடைகளின் அதிகாலை 3 மணிக்கு பிறகு வந்த கொள்ளைகள் பூட்டுகளை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலை கடைகளை திறக்க வந்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கீரமங்கலம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 


முகமுடி கொள்ளையர்கள் :
    கீரமங்கலம் போலிசார் திருட்டு நடந்த கடைகளுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதில் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அனைத்து கடைகளிலும் முகமூடி அணிந்த நபர்கள் பூட்டை உடைத்து திருடும் முன்பு கண்காணிப்பு கேமராக்களை வேறு பக்கமாக திருப்பி வைத்துவிட்டு கடைகளுக்குள் சென்றுள்ளனர். கடைகளுக்குள் சென்று வேறு எங்கும் தேடாமல் நேராக கல்லா இருக்கும் பகுதிக்கு சென்று கல்லைவை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது கதவுகளை சாத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் பூச்சி மருந்து கடையில் மட்டுமே பணம் அதிகமாக இருந்துள்ளது மற்ற கடைகளில் பணம் குறைவாக இருற்துள்ளது.


சில்லரை எடுக்கவில்லை :
    ஒரு ஜவுளிக்கடையின் உள்ளே நுழைந்த முகமூடி திருடன் கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல நடந்து சென்றவன் மீண்டும் கடைக்குள் சென்று கைலி ஒன்று எடுத்துக் கொண்டு மாற்றுத் திறனாளி போல நடித்துக் கொண்டு நடந்து சென்று கதவை சாத்தி விட்டு செல்கிறான். 


    மேலும் பேக்கரி, மளிகை கடைகளில் தாள்களாக இருந்த பணத்தை மட்டும் எடுத்தவர்கள் சில்லரை காசுகளை எடுக்கவில்லை. மேலும் வேறு எந்த பொருளையும் உடைக்கவில்லை. இந்த பதிவுகளை பார்த்த கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். கீரமங்கலத்தில் ஒரே நேரத்தில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.