Advertisment

ஜி.எஸ்.டி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Advertisment

அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், வி.தனலட்சுமி, ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

GST
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe