நியூஸ் கிளிக் மற்றும் ஊடகங்கள் மீது பாஜக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், “பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் (மிண்ட்) அருகே புதனன்று (அக். 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி (திராவிடர் கழகம்), டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), மு.செந்திலதிபன் (மதிமுக), மு.வீரபாண்டியன் (சிபிஐ), இளஞ் சேகுவேரா (விசிக), பி.சம்பத், எம்.ராமகிருஷ்ணன், எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா சிபிஐ(எம்), ஹைசர் முகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), நக்கீரன் ஆசிரியர், பி.எஸ்.டி.புருஷோத்தமன் (டியுஜெ), சி.கருணாகரன் (சமத்துவக் குரல்), வி.மணிமாறன் (மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்) உள்ளிட்டு மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments