கரோனாவிலிருந்து குணமடைந்த கே.பாலகிருஷ்ணன்!

marxist communist party balakrishnan coronavirus negative discharged govt hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கரோனா உறுதியான நிலையில், கடந்த 12- ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கே.பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த கே.பாலகிருஷ்ணன் வீடு திரும்பினார். சிறந்த முறையில் சிகிச்சை அளித்த டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

rajiv ganthi hospital DISCHARGED K.Balakrishnan Marxist Communist
இதையும் படியுங்கள்
Subscribe