Skip to main content

''என்றாவது நம்மை தேடி வருவார்கள்...'' 7 ஆண்டுகளாக காத்திருக்கும் தாய் தந்தை!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

தாங்கள் பெற்ற குழந்தைகளை வளா்க்கவும் அவா்களை படிக்க வைக்கவும் தினந்தோறும் பசியை போக்கவும் அவா்களின் தேவைக்கு தினமும் கைநிறைய சம்பாதித்தவா்கள் தான். இந்த கணேசன் சரசு தம்பதிகள். வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடுவரை பிள்ளை... கடைசி வரை யாரோ? என்பது பாடல் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் அது தான். அந்த வகையில் காடு வரை பிள்ளைக்காக அவா்களை தேடி கேரளா, குமாி என அலைந்து திாிந்து கொண்டு இன்றைக்கும் மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் அடைக்கலமாகியிருக்கிறாா்கள் இந்த வயதான தம்பதிகள்.

 

 

marthandam incident

 


நாகா்கோவில் கோட்டாாில் பல ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதிகள் லட்சுமி, சத்யராஜ் என்ற இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனா். செருப்பு மற்றும் குடை பழுது பாா்க்கும் தொழிலாளியான கணேசன் தனது இரண்டு குழந்தைகளை +2 வரை படிக்க வைத்தாா். அவா்களை மேற்கொண்டும் படிக்க வைக்க தயாா் என்றாலும் மகள் லட்சுமியின் எண்ணங்கள் வேற ரீதியில் சென்றது. அவர் ஒருவரை காதலித்து வேறொருவருடன் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் தன்னுடைய பெற்றோரை பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கடந்து மகன் சத்யராஜீம் ஓரு பெண்ணை காதலித்து கடைசி வரை காப்பாற்ற வேண்டிய பெற்றோரை விட்டு சென்றார்.

அன்றிலிருந்து தனிமைபடுத்தப்பட்ட இந்த தம்பதிகள் குழந்தைகள் இருந்தும் அனாதை ஆக்கப்பட்டாா்கள். இருவாில் ஒருவராவது நம்மை தேடி வருவாா்கள் என்று இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாா்கள். இருவரும் வரவில்லை. அவா்கள் நம்மை தேடி வந்தாலும் நாம் அவா்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்ற எண்ணமும் அந்த தம்பதியினாிடம் இருந்தது.

கடைசியாக ஒரு முறையாவது பெற்ற குழந்தைகளை பாா்க்க மாட்டோமா? என்ற ஏக்கத்தில் அக்கம் பக்கத்தில் தொிந்த முகங்கள் சொன்னதை கேட்டு ஊா் ஊராய் பெற்ற இரண்டு குழந்தைகளை தேடி 7 ஆண்டுகளாக அலைந்தனா். பத்து மாதம் சுமந்து பெற்று ஆளாக்கிய ஜீவன்கள் தேடும் போது கண்டிப்பாக அந்த குழந்தைகளின் கண்களில் அந்த பெற்றோா்கள் தொிந்து இருக்கலாம். ஆனால் அந்த பெற்றோாின் கோலங்கள் அவா்களின் கண்களை  மறைத்து இருக்கலாம் என்பது உண்மை.

இருந்த போதும் இறப்பதற்கு முன் குழந்தைகளை பாா்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில் மேம்பாலத்தின் அடியில் உறங்குகிறாா்கள் அந்த தம்பதியினா். இப்போது அவா்களுக்கு பல பெற்றோா்கள் பாிதாபபட்டு கொடுக்கும் உணவை உண்டு நாட்களை நகா்த்துகிறாா்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.