Skip to main content

அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம்- கிராமத்தின் பிரச்சனை தீர்ந்துடுமாம்!!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ளது சோமநாயக்கன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் யாராவது சிக்கி கிராமத்தில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவலைக்கொண்டனர். இதனை சரிச்செய்ய என்ன செய்ய வேண்டும் என ஊர் மக்கள் கூடி பேசும்போது, அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்குத்தும் திருமணம் செய்து வைத்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனச்சொல்லினர் இதனை ஊர்மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 

 Marriage to the trees - Village problem will be solved !!

 

அந்த ஊரில் உள்ள முருகன் கோயில் எதிரே அரசமரமும், வேப்பமரமும் அருகருகே உள்ளன. இதனால் இங்கேயே திருமணத்தை செய்து வைத்துவிடலாம் என முடிவு செய்து ஆணாக அரசமரத்தையும், பெண்ணாக வேப்பமரத்தையும் முடிவு செய்து திருமண பத்திரிக்கை அடித்து ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கினர். 

 

 

 

ஜனவரி 28ந்தேதி முகூர்த்தநாளை முன்னிட்டு இன்று காலை இரு மரத்திற்கும் திருமணம் செய்யப்பட்டது. அரசமரத்துக்கும் - வேப்பமரத்தையும் மணமகன் - மகளாக புத்தாடை அணிவித்து ஜோடித்தனர். மங்கள வாத்தியம் இசைக்க முருகன் கோயில் பூசாரி வேப்பமரத்துக்கு தாலிக்கட்டினர். அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அச்சதை போட்டு ஆசிர்வதித்தனர். பின்னர் திருமணத்துக்கு வந்தவர்கள், மொழி எழுதினர். அதன்பின்னர் உணவு பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் உணவு உண்டனர். 

 

 

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் பேசும்போது, அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்துவைப்பது ஊருக்கு நன்மை விளைவிக்கும் என்பது எங்கள் கிராமத்தின் ஐதீகம். அதன்படி திருமணம் செய்து வைத்தோம், நிச்சயம் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.