Advertisment

சிறுமிகளை திருமணம் செய்து வன்கொடுமை;  போக்சோவில் இருவர் கைது

Marriage of girls;  Two arrested in POCSO

ஈரோடு மாவட்டம் 46 புதூர், பச்சப்பாளியை சேர்ந்த தினேஷ் (24). கூலி தொழிலாளியான இவர் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குழந்தை திருமண தடை சட்டப் பிரிவு மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி, தளவாய் பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (24). கூலித் தொழிலாளியான இவர் பவானியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சக்திவேல் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment
POCSO police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe