Skip to main content

கரோனாவால் தள்ளிப்போன திருமணம்? தற்கொலை செய்து கொண்ட மாப்பிள்ளை!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020


 

  veppur - Cuddalore district -



கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது ஆவட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் சின்னத்தம்பி (28 வயது). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர்கள் சின்னதம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து சின்னத் தம்பிக்கு பிடித்த ஒரு பெண்ணை பார்த்து பேசி முடிவு செய்தனர். இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடத்துவது என இருவீட்டாரும்  முடிவு செய்தனர்.


இதற்கிடையே கரோனா வைரஸ் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் மிக சிறப்பாக நடத்த வேண்டிய திருமணத்தை உற்றார் உறவினர்கள் இல்லாமல் எளிமையாக நடத்துவதற்கு விருப்பம் இல்லாததால் இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடத்துவது என பேசி முடிவு செய்தனர்.

இந்தநிலையில் மணமகன் சின்னத்தம்பி தனக்கு உடனே திருமணம் செய்து வைக்கக்கோரி, தனது பெற்றோர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது திருமணம் செய்து வைக்க முடியாது பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணமகன் சின்னத்தம்பி அவரது கிராமத்திலுள்ள மூப்பனார் கோவில் பின்புறமுள்ள வேப்பமரத்தில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 


இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலை செய்துகொண்ட சின்னத்தம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கரோனாவால் தனக்கு நடக்க வேண்டிய திருமணம் தள்ளி வைக்கப்பட்ட விரக்தியில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவ்வூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.