தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிற சூழலில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அரசு பிறப்பித்துள்ளது. கூட்டங்கள் கூடுதல், வெளியில் முகக்கவசம் இன்றி நடமாடுதல் போன்ற சில நடைமுறைகளை தடுக்கும் விதமாக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தொற்றைக் கருத்தில் கொண்டு அரசு விடுமுறை நாட்களிலும் மெரினா கடற்கரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தெலுங்கு மற்றும் கன்னட வருடப் பிறப்பு நாளான இன்று அரசு விடுமுறை என்பதால், கடற்கரை மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.