நிவர் புயலால் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், சென்னை மெரினா கடற்கரையில் வீசிய புயல் காற்றால், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையுள்ள உள்வட்ட சாலை முழுவதும் கடல் மணல் மூடியது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு, அங்கிருந்து மணலை அப்புறப்படுத்தினர்.
புயலின் தீவிரம்...! சாலையை மூடிய கடற்கரை மணல்..! (படங்கள்)
Advertisment