Skip to main content

அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

nnn

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள மீனவர்கள் குறைந்தது 50 நபர்கள் அடங்கிய குழுக்களாகச் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட சுருக்கு மடி வலைகள் தயார் செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித்தொழிலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

தற்போது மீனவர்கள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்கக் கூடாது என்று மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மரக்காணம் அருகில் உள்ள கூனிமேடு மீனவர் கிராமத்தில் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி கடலுக்குச் சென்று மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது அங்கு ஆய்வு செய்யச் சென்ற விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி ஏன் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறியதோடு அவர்களிடமிருந்த மீன்கள் மற்றும் சுருக்குமடி வகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதனால் கோபமுற்ற மீனவ கிராம மக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார் மீனவர் சங்கத்தினர் என அனைவரும் ஒன்று திரண்டு மோட்டார் படகுக்குப் பயன்படுத்தும் டீசல் கேனில் இருந்த டீசலை தங்கள் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்ளப் போவதாகக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பறிமுதல் செய்த மீன் மற்றும் வலைகளை அதிகாரிகள் அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்த மீனவர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.