Skip to main content

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்! - சேலம் போலீஸ் கமிஷனர் 

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
h

 

இந்திய மோட்டார் வாகனச்சட்டப்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிய வேண்டும். இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக்கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இரு நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், ''ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் போதாது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும். மோட்டார் சைக்கிளில் பின்பக்கம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? அதைப்பற்றி ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை?,'' என்று அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார்.


அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறினார்.


இதற்கிடையே, தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கும் இன்று (ஆகஸ்ட் 24, 2018) ஓர் சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். அதில், இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெரும்பாலான சாலை விபத்துகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை பயணி ஆகியோர் ஹெல்மெட் அணியாததால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பை சந்திக்கின்றனர்.


இதனை தவிர்க்கும் வகையில், சேலம் மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

இப்போ விழுமோ எப்போ விழுமோ? - ஹெல்மெட்டுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 'Now or when will it fall?'-Government employees working with helmets

 

அரசு அலுவலகக் கட்டடம் பாழடைந்து கிடக்கும் நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றும் வினோத சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

 

தெலுங்கானாவில் ஜெகத்தியாலா மாவட்டம் பீர்பூர் நகரில் உள்ளது மண்டல பரிஷத் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். பலமுறை வேறு கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றும்படி ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அங்கே பணி செய்யத்தான் வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இந்த அலுவலகத்தின் சில இடங்கள் இரண்டு முறை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

Next Story

பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; கோவை மாநகரக் காவல் அதிரடி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக் கோவை மாநகரக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

கோவையில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் கோவை மாநகரக் காவல்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதோடு பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.