Skip to main content

மன்னார்குடி மாஃபியா உங்களை சும்மா விடாது என்று கூட பலர் என்னிடம் கூறினார்கள்- கர்நாடக ஐஜி ரூபா

Published on 09/09/2018 | Edited on 09/09/2018
ig

 

சிறையில் சசிகலா தொடர்பான விஷயங்களில் எனது பணியை மட்டும் தான் செய்தேன். மன்னார்குடி மாஃபியா உங்களை சும்மா விடாது என்று கூட பலர் என்னிடம் கூறினார்கள். அது பற்றி நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கர்நாடக ஐஜி ரூபா கோவையில் தெரிவித்துள்ளார். 

 

கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வேளாண்மை பல்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில் , நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு விருது வழங்கும்  நிகழ்ச்சி்நடைபெற்றது. இதில்  கர்நாடக மாநில ஐ.ஜி.ரூபா பங்கேற்று நேர்மையாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி.ரூபா,

 

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்கதக்கது எனவும் ஊழல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், ஊழல் தொடர்பாக அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும் எனவும் தெரிவித்தார்.சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த அவர், நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை எனவும் தெரிவித்தார்.

 

 

தமிழக காவல்துறை தலைவர் மீதான சிபிஐ நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் வேறு மாநிலத்தை அதிகாரியாக இருப்பதால் இது குறித்து பேசுவது முறையாக இருக்காது எனவும் ஐ.ஜி.ரூபா தெரிவித்தார். பரப்பன அக்ரஹார சிறையில் சிறை அதிகாரியாக என்னுடைய பணியை மட்டுமே செய்தேன் எனவும், அப்போது மன்னார்குடி மாபியாவால் ஆபத்து ஏற்படும் என பலர் தன்னை எச்சரித்ததாகவும், ஆனால் அதைபற்றி கவலைப்படாமல் பரப்பன ஆக்ரஹார சிறையில் நடந்த செயல்களை  வெளிப்படுத்தினேன் எனவும் தெரிவித்தார். சிறைதுறையில் எனது நடவடிக்கையினை தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக யாரிடமும் கேள்வி எழுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

பரப்பன அக்ரஹார சிறையில் தற்போது என்ன நிலைமை இருக்கின்றது  என்பது தனக்கு தெரியாது என கூறிய அவர், எனது பணியிட மாற்றத்திற்கு பின்னர் புதிதாக வந்த சிறை அதிகாரிசிறையில் சசிகலா விதிமீறல் தொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்பித்ததாகவும், அந்த அறிக்கை தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற முயற்சித்தும் தன்னால் பெற முடியவில்லை எனவும் ஆர்.டி.ஐ விண்ணப்பம் கொடுத்தால் வேண்டும் என்றே  தாமதபடுத்துவது  தொடர்கின்றது என தெரிவித்தார்.

 

 

ஆர்.டி.ஐயில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வெளிப்படையான தன்மை இல்லை எனவும், சரியான பதில் கொடுப்பதில்லை எனவும் ஐ.ஜி.ரூபா தெரிவித்தார்.பரப்பன அக்ரஹார சிறை விவகாரம் தொடர்பாக தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் வரவில்லை என தெரிவித்த சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாக கருத்துகள் வருவதாகவும் அதைபற்றி தான் கவலைபடவில்லை எனவும் ஐ.ஜி.ரூபா தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.