Skip to main content

உன்னைவிட மூத்த பொண்ணுடா... படிக்கிற வேலைய பாரு... அறிவுரை கூறிய தாயை கொன்ற மகன்

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
son killed mother



திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கண்மணி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 37 வயதாகும் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


கண்மணி தையல் வேலை செய்து வந்தார். இவருடைய மூத்த மகன் அந்தப் பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். 17 வயதுடைய இரண்டாவது மகன் திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 
 

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்த கண்மணியின் மூத்த மகன், வீட்டில் தனது தாய் இறந்து கிடந்ததை பார்த்தும் கடும் அதிர்ச்சி அடைந்து கதறினார். தனது தம்பிக்கு செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அந்த செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.


மூத்த மகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். பெருமாநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
 

இதற்கிடையில் கண்மணியின் இளையமகன் கிராம நிர்வாக அதிகாரியிடம் தனது தாயை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். அவர் அந்த மாணவனை பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை செய்தனர்.
 

''சம்பவத்தன்று 2ஆம் தேதி இரவு அண்ணன் வீட்டில் இல்லை. சேவூர் சென்று விட்டார். நானும் அம்மாவும்தான் இருந்தோம். ஈரோட்டில் உள்ள கல்லூரில் 3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காதலிப்பதால், அவரை பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அதற்கு நீ சம்மதிக்ணும் என கூறினேன்.

அதற்கு அம்மா, உன்னைவிட அந்த பொண்ணுக்கு வயசு கூட, இதெல்லாம் ஒத்துவராது என கூறியதால் எனக்கு ஆத்திரம் வந்தது. நான் அம்மாவுடன் சண்டைப்போட்டு திட்டினேன். அம்மாவும் என்னை திட்டி பேசிச்சு. உன்னைவிட மூத்த பொண்ணுடா, படிக்கிற வேலைய பாரு, படிக்க அனுப்புனா பொண்ணு பின்னாடி சுத்துரியான்னு கேட்டுச்சி.


அதுக்கு நான், நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய் என கூறி அம்மாவை தாக்கி, வீட்டில் இருந்த கயிற்றால் அம்மாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பயத்தில் என்ன செய்யறதுன்னு தெரியல. வீட்டைவிட்டு ஓடிப்போய் கோவிலில் உட்கார்ந்திருந்தேன். இரவு முழுவதும் அங்கேயே மறைந்திருந்தேன்.


கோயிலுக்கு வெளியே நடந்து சென்றவர்கள், எங்க அம்மா இறந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். பயம் அதிகமானது. அதனால என்ன செய்வதன்று தெரியாமல் விஏஓவிடம் நடந்ததை சொன்னேன்'' என்று போலீசார் விசாரணையில் இளைய மகன் கூறியுள்ளார். 


கண்மணியின் இளையமகன் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். வயது 17 என்பதால் அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.

Next Story

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்த தாய்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 mother jumped in front of a train with two girls

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அடுத்த வேலம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அறிவழகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு தார்ணிகா(7) ஜெனிஸ்ரீ(5) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலாவுக்கு முன்பே விஜயலட்சுமி என்பவரை அறிவழகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அறிவழகன் – விஜயலட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அறிவழகன். சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கும் முன்பே வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் அறிவழகன்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ விஜயலட்சுமி வேலம் கிராமத்தில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது என் வாழ்க்கை, என் பிள்ளைகள் வாழ்க்கை இப்படியாகிடுச்சே என கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு இன்று காலை கிளம்பினார்.

அவர் கோபத்தில் தனது அம்மா வீட்டுக்குத்தான் செல்வார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். அவர் வாலாஜா ரயில் நிலையத்திற்குச் சென்றவர் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.