Skip to main content

“சில முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ரவுடிபேபி சூர்யா பின்னாடி இருக்கிறார்கள்” - பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

சுப்புலட்சுமி என்கிற ரவுடிபேபி சூர்யாவையும், சிக்கந்தர் என்கிற சிக்காவையும் பாலியல் வழக்கில் கைதுசெய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும் பொதுமக்களும் சேர்ந்து கமிஷனர் அலுவலகம் முன் திரண்டனர். ஆதாரத்துடன் வழக்குப் பதிவுசெய்து வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கை உடனடியாக எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெண் ஒருவர் கூறியதாவது, “ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தேன்.

 

நேரடியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்குச் சென்று ஆட்சியரிடம் புகார் மனுவைக் கொடுத்தேன். அங்கிருந்து இந்த வழக்கைத் தொடர அனுமதி வழங்கினர். அதன் பின்னர் மேடவாக்கம் மவுண்ட் டிசிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் ஏசிக்கு அனுப்பி, சைபர் கிரைம்ல விசாரிக்கச் சொன்னார்கள். சைபர் கிரைம்ல எஸ்.ஐ. பாலசுப்பிரமணியிடம் என்னிடம் இருக்கும் ஆதாரத்தைக் கொடுத்தேன். அனைத்து ஆதாரங்களையும் வாங்கிய அவர், எஃப்.ஐ.ஆர். பதிந்தாரா இல்லையா என்றே தெரியவில்லை. வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என கேட்க அவரை தொடர்புகொண்டால் என்னையே மிரட்டுகிறார். 14 வருடம் பணியில் இருக்கிறேன். எங்க வேணாலும் சென்று என்ன வேனாலும் செய்துகொள்ளுங்கள் என கூறுகிறார். இப்ப நான் தொடர்ந்த வழக்குக்குப் பதில் தெரியணும். ரவுடிபேபி சுப்புலட்சுமி நடிகையோ, யூடியுபரோ கிடையாது.

 

அவருடைய முழு வருமானமும் பெண்களைப் பாலியல் தொழிலுக்கு அமைத்துக்கொடுத்து டாலர்களில் சம்பாதித்துவருகிறார். சில கட்சிக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் அவர் பின்னாடி இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை சைபர் கிரைம்ல கேட்டாங்கன்னா எல்லா ஆதாரத்தையும் கொடுப்பேன். மேலும், அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி என்னை ஃபோனில் மிரட்டுகிறார். அதனால் நீங்க சுப்புலட்சிமியை கைது செய்து விசாரணை செய்தால் எல்லா உண்மையும் வெளியேவரும். அதேபோல் அவருக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என எல்லாம் வெட்ட வெளிப்படையாக தெரியவரும்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.